Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2015 இதழ்கள் -> ஆகஸ்ட் 01-15 -> ஆசிரியர் பதில்கள்
Parent Category:
2015
Category:
ஆகஸ்ட் 01-15
  • Print
  • Email

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : டாஸ்மாக் கடை மூடுவதில் கலைஞர் மவுனம் சாதிப்பது ஏன்? மூடினால் கள்ளச்சாராயம் பெருகும்; அரசுக்குக் கிடைக்கும் வருவாய் தனிப்பட்டவருக்குப் போகும் என்று எண்ணுகிறாரா? தங்கள் கருத்து என்ன? - தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : டாஸ்மாக் ஏற்படுத்திய விளைவு கொடுமையானது. குடிப்பழக்கம் குழந்தைக்கும்  வரவேண்டும் என்று எண்ணுகிற நல்ல குடிமகன்கள் உள்ள நிலையில், மதுவிலக்கும் அதேநேரத்தில் கள்ளச் சாராயத் தடுப்புக்குரிய சரியான நடவடிக்கைகளும் _ சட்டங்களும் _ கண்காணிப்பும் பல்முனைத் தாக்குதல்போல் நடத்தப்பெற வேண்டும் என்பதே நம் கருத்து.

கேள்வி : தேசிய கீதத்தில் மாற்றம் செய்யக்கோரி ராஜஸ்தான் மாநில ஆளுநர் கூறியுள்ள கருத்துக்கள் அரசியல் சட்ட விதிகளுக்கு முரண் இல்லையா? இவர் மீது ஜனாதிபதி நேரடியாக நடவடிக்கை எடுக்க இயலுமா? - நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்

பதில் : அது ஒரு கருத்து. கருத்துக் கூறியதற்காக எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? அவர் மாற்றி சட்டமோ, ஆணையோ பிறப்பிக்கவில்லையே!

கேள்வி : தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சியைக் கொண்டுவரப்போவதாக மோடி மற்றும் பா.ஜ.க.வினர் கூறுவது குறித்து தங்கள் கருத்து என்ன?
-_ பா.வெற்றிச்செல்வி, வியாசர்பாடி

பதில் : காந்தியை அவர்கள் பாராட்டுவதும், அம்பேத்கரைப் புகழ்வதும், காமராஜரை தமிழ்நாட்டில் வரிப்பதும் எல்லாம் அவர்களது தந்திர வியூகங்கள் ஏமாறக் கூடாது!

கேள்வி : கல்விக்கடன்கள் முடக்கப்படுவது ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்ந்தெழக் கூடாது என்ற மறைமுகத் திட்டத்தின் செயல்பாடா?
_ மா.காளியப்பன், உத்திரமேரூர்

பதில் : இருக்கலாம் _ இக்கருத்து சரியானதே!

கேள்வி : கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவது போல், குடியால் குடிகளைக் கெடுத்து இலவசம் பெறுவது சரியா? -  வே.மாரியம்மாள், காஞ்சிபுரம்

பதில் : புரிய வேண்டிய இந்த உண்மை வாக்குப்போட ரூபாய் பெற்று ஏமாறும் வாக்காளர்களுக்கு நம் நாட்டில் புரியவில்லையே! என்ன செய்து தொலைப்பது?

கேள்வி : தொட்டில் குழந்தைத் திட்டம் போல், ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயல்வோருக்கு காப்பகங்களை அரசே ஏன் நடத்தக் கூடாது? - தி.கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீரங்கம்.

பதில் : துணிவும், கொள்கைத் தெளிவும், சமதர்மமும் நிறைந்த ஒரு ஆட்சி வந்தால் அது, தானே நடக்கும்.

கேள்வி : ஜாதி மறுப்பு மணம் புரிந்தோர் பிள்ளைகளுக்கு தனி இடஒதுக்கீடு தரவேண்டியது கட்டாயமல்லவா? _ பா.திருமூலதாசன், நாமக்கல்

பதில் : ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர் கழகம் 9சி னிஷீணீ _ கலப்பு (ஜாதி மறுப்பு) திருமணங்களில் பிறந்த பிள்ளைகளுக்கும் _ வாழ்விணையருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இனி இடஒதுக்கீடு தரப்படல் வேண்டும் என்பதைத் துல்லியமாக விளக்கி தீர்மானம் போட்டுள்ளோம் _  வற்புறுத்தி வருகிறோம். விரைவில் இது பிரச்சாரம் _ போராட்ட வடிவம் எடுக்கும்!

கேள்வி : திராவிட ஆட்சியால் தமிழகம் தாழ்ந்தது, கெட்டது என்ற கருத்துப் பரப்புக்கு எதிராய் திராவிட ஆட்சிகளால் பெற்ற பயன்களைப் பட்டியலிட்டு ஒரு நூல் தாங்கள் வெளியிட்டால் என்ன? - க.அர்ஜுனன், சத்தியமங்கலம்

பதில் : விரைவில் வெளிவரும். ஆய்வாளர் திருநாவுக் கரசின் உரை, கட்டுரை விடுதலையில் வெளிவந்துள்ளது. தங்கள் கருத்து மிகச் சரியானது.

கேள்வி : தமிழ்த்தேசியம் பேசுவோர் பார்ப்பனர்களை தமிழராக ஏற்பது வரலாற்றுப் பிழையல்லவா? - சீ.முத்துப்பாண்டியன், திருநெல்வேலி

பதில் : அதிலென்ன சந்தேகம். திராவிடர் இயக்கம் மூட்டிய தீயில் குளிர்காயும் நுனிப்புல் பேர்வழிகளுக்கு அது புரியாது!  பார்ப்பனர் தமிழரல்லர் என்று மறைமலை அடிகளார் எழுதியுள்ளதை படித்து அறிந்துகொள்ளட்டும்.

கேள்வி : அத்வானியின் எதிர்ப்பு சுஷ்மா பிரச்சினையில் வரவில்லையே ஏன்?
_ கு.அஜீத்குமார், மதுரை

பதில் : இருவரும் ஒரே அணியினர். எனவே, இது அதிசயம் அல்ல.

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit ஆசிரியர் பதில்கள் in FaceBook Submit ஆசிரியர் பதில்கள் in Google Bookmarks Submit ஆசிரியர் பதில்கள் in Twitter Submit ஆசிரியர் பதில்கள் in Twitter
  • < Prev
  • Next >

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.