Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2016 இதழ்கள் -> ஆகஸ்ட் 01-15 -> மாற்றுத் திறனாளியின் மகத்தான சாதனை!
Parent Category:
2016
Category:
ஆகஸ்ட் 01-15
  • Print
  • Email

மாற்றுத் திறனாளியின் மகத்தான சாதனை!

விழிகளை இழந்தாலும், விடா முயற்சியால் அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப் பேற்று மாணவர்களை திறம்பட அரவணைத்துச் செல்வதுடன் அவர்களின் தேர்ச்சி விகிதத்தையும் அதிகரித்து வருகிறார் மதுரை ஆனையூரைச் சேர்ந்த எஸ்.எஸ். பாண்டியராஜன்.

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் எஸ்.எஸ்.பாண்டியராஜன் (51). மதுரை ஆனையூரைச் சேர்ந்த இவர், தமிழகத்தின் முதல் பார்வையற்ற மாற்றுத்-திறனாளி தலைமை ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர்.

நெடிய சட்டப் போராட்டத்தின் மூலமாக தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று, தனது பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். மடிக்கணினியில் பேசும் மென்பொருளை பயன்படுத்தி, மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அவர், சிறப்பு கரும்பலகையில் பாடங்களை எழுதுகிறார். மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சியும் அளித்து வருகிறார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் பாண்டிய-ராஜன் கூறியதாவது: பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்தபோது, திடீரென பார்வைத் திறன் குறையத் தொடங்கியது. எவ்வளவோ சிகிச்சை அளித்தும் சரி செய்ய முடியவில்லை. 4 ஆண்டுகளில் பார்வைத்திறன் முற்றிலும் பறிபோனது. பின்னர் சராசரி மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே மீண்டும் சேர்ந்து பள்ளிப் படிப்பை முடித்தேன். ஆங்கிலத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட். முடித்த நான், 1994ஆ-ம் ஆண்டு தருமபுரியில் உள்ள நெருப்பூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 9 மாதங்கள் பணிபுரிந்த பின்னர், மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றலானேன். அங்கு 1994ஆ-ம் ஆண்டு முதல் 2002ஆ-ம் ஆண்டு வரை பணிபுரிந்தேன். பின்னர் 2002 முதல் 2014ஆ-ம் ஆண்டு வரை, மகபூப்பாளையத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்தேன். அப்போது தலைமை ஆசிரியர் பணிக்கான தகுதி இருந்தது. ஆனால், பணி உயர்வு பட்டியலில் எனது பெயர் இடம்-பெறவில்லை.

இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆட்சியராக இருக்கும்போது தலைமை ஆசிரியர் பணியை சிறப்பாக செய்ய முடியும் எனக் கூறி, நான் ஆசிரியராக பணியில் இருந்த-போது மேற்கொண்ட அனைத்து உத்திகளையும் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினேன். அதன் பிறகே எனக்கு தலைமையாசிரியர் பணி கிடைத்தது.

2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாப்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சேர்ந்தேன். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் முழு ஒத்துழைப்பு வழங்கினர். அதற்கு முன் 60 சதவீதம் அல்லது 70 சதவீதமாக இருந்த தேர்ச்சி 2015-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு தேர்வில் 97 சதவீதம், பிளஸ்2 தேர்வில் 94 சதவீதம் ஆக அதிகரித்தது. பின்னர் 2015ஆ-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன்.

கடின உழைப்பு, தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணம், அனைவரையும் அரவணைத்துச் செல்லுதல் போன்ற பண்புகள் இருந்தால் எதையும் சாதிக்கலாம். எந்த மாணவரும் கெட்டவர் கிடையாது. சில புறக்கணிப்புகளால் அவர்களை நாம் அப்படி புரிந்துகொள்கிறோம். அவர்கள்தான் உண்மையிலேயே மிகவும் பாசமாக இருக்கிறார்கள். தவறானவர்கள் என நினைத்த சிலருடன் பேசும்போதுதான் அவர்களின் நிலை நமக்கு புரிந்தது. சிலர் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வுகளும் உண்டு என்றார்.

பார்வையற்ற மாணவர்களின் கற்றல் திறனை கருத்தில்கொண்டு, தனது சொந்த முயற்சியால் ஷ்ஷ்ஷ்.மீஹ்மீsவீரீலீtவீஸீபீவீணீ.வீஸீ என்ற வலைதளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். அதில் அவர்களுக்கு தேவையான அனைத்து விண்ணப்பங்கள், பாடமுறைகள், ஆடியோக்கள் மட்டுமின்றி, சராசரி மாணவர்களுக்குத் தேவையான போட்டித் தேர்வு நூல்களையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்தியாவிலேயே பார்வையற்ற தேசிய சதுரங்க நடுவராக பாண்டியராஜன் மட்டுமே தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit மாற்றுத் திறனாளியின் மகத்தான சாதனை! in FaceBook Submit மாற்றுத் திறனாளியின் மகத்தான சாதனை! in Google Bookmarks Submit மாற்றுத் திறனாளியின் மகத்தான சாதனை! in Twitter Submit மாற்றுத் திறனாளியின் மகத்தான சாதனை! in Twitter
  • < Prev
  • Next >

உண்மையில் தேட

wrapper

டிசம்பர் 01-15 2019

  • இயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்!
  • அப்படிப்போடு
  • அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (57) : கடவுள் பெயரைச் சொன்னால் உயிர் போகாதா?
  • ஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது!
  • உங்களுக்குத் தெரியுமா?
  • உணவே மருந்து
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (49) : இருபது கேள்விகளும் எமது பதில்களும்
  • கவிதை : வியப்புமிகு ஆசிரியர்
  • கவிதை : ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்து!
  • கவிதை : எம்தலைவ! நீங்களன்றி வழியே திங்கே?
  • கவிதை : வாயார - மன்மார - கையார வாழ்த்துவோம்!
  • சிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்.... : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்!
  • சிறப்புக் கட்டுரை : உலகப்பன்!
  • சிறப்புக் கட்டுரை : நோபல் அறிஞர்களின் வரிசையில் தமிழர் தலைவர்
  • சிறப்புக் கட்டுரை : பெரியார் பாதையில் துணிவுடன் பயணிக்கும் ஆசிரியர் அய்யா!
  • சிறுகதை : வேதங்கள் சொல்லாதது
  • சுவடுகள் : திருக்குறளில் கடவுள் வாழ்த்தா?
  • தகவல் களஞ்சியம்
  • தடைகளை நொறுக்கிச் சரித்திரம் படைத்த பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு
  • தலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்!
  • நுழைவாயில்
  • நேர்காணல் : ஆசிரியரை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்!
  • நேர்காணல் : ஆசிரியர் காலத்தில் திராவிடர் கழகம் உச்சத்தைத் தொட்டுள்ளது!
  • நேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்!
  • நேர்காணல் : ஆசிரியர்க்கு அதிகம் கோபம் வரும் ஆனால், அது எப்போதும் நன்மை தரும்!
  • பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்
  • பெரியார் பேசுகிறார் : முரண்பட்ட மூடநம்பிக்கைப் பண்டிகை “கார்த்திகைத் தீபம்”
  • மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [2]
  • முகப்புக் கட்டுரை : இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி!
  • வாசகர் கடிதம்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.