Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2016 இதழ்கள் -> நவம்பர் 01-15 -> ஆசிரியர் பதில்கள்
Parent Category:
2016
Category:
நவம்பர் 01-15
  • Print
  • Email

ஆசிரியர் பதில்கள்

 

 

 

கே:       வெடிப்பொருட்களை ஒதுக்குப் புறத்தில் வைக்காமல், மக்கள் மிகுந்த இடங்களில் வைக்க அனுமதியளித்த அலுவலர்தானே முதன்மைக் குற்றவாளி?

                - சு.காந்திமதி, விழுப்புரம்

ப:           நிச்சயமாக! ‘நோய்நாடி நோய் முதல் நாடுதல்தான்’ நம் நாட்டில் இல்லையே! அதன் விளைவே இது!

கே:       இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட தகுதித் தேர்வுகளை மத்திய அரசு அறிமுகம் செய்வதை நாடுதழுவிய அளவில் ஒருங்கிணைந்து எதிர்க்க தாங்கள் முயற்சி மேற்கொள்வீர்களா?

                - அ.யாழினி, தூத்துக்குடி

ப:           தமிழ்நாடு முதலில் காப்பாற்றப்பட வேண்டும். நம் கவனம் இதில்தான் முதலில். பிறகே மற்றவை. மற்றவர்களின் பக்குவம் _ சமூகநீதி உணர்வு பாலபாடம்; நாம் ‘மேல் பட்டதாரி’அதில். எனவே, இப்பணியின் துவக்கம் முக்கியம்.

கே:       சல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்திய மத்திய அரசு, காவிரி நீர்ப் பங்கீட்டில் செயல்படுத்தாது சூழ்ச்சியாகச் செயல்படுவது மோசடிச் செயல் அல்லவா?

                - கு.சீத்தாபதி, சென்னை-18

ப:           முழுக்க முழுக்க மோசடி; அரசியல் பார்வை _ அப்பட்டமாக. 2017 கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பார்வை _ கனவு!

கே:       கடவுளால் எதுவும் இவ்வுலகில் நிகழ்வதில்லை யென்று நன்கு தெரிந்தும் அந்த நம்பிக்கையை விடாமல் மக்கள் மந்தைகளாய் செயல்பட என்ன காரணம்?

                - நாத்திகன் ச.கோ., பெரம்பலூர்.

ப:           பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஊறிப்போன போதை இது; இதை அசைத்து விட்டோம்; அறவே ஒழிப்பது அவ்வளவு எளிதான பணியா? விஞ்ஞானிகள், டாக்டர்கள்கூட இந்த ‘வியாதி’யிலிருந்து விடுபட-வில்லையே!

கே:       உயிரிழப்பு, விலங்கு வதை என்று சொல்லி சல்லிக்கட்டைத் தடுக்கும் நீதிமன்றங்கள், அதைவிட அதிகம் பலிகொள்ளும் பட்டாசு தயாரிப்பு-களுக்குத் தடை விதிக்காதது ஏன்?

- நா.கலைச்செல்வி, புதுவை-1

ப:           மிலியன் டாலர் கேள்வி! பதில் வெளிப்படை! (லாபநோக்கம்தான்!)

கே:       அரசியலமைப்புச் சட்டத்தை ஆட்சியாளர்களே புறக்கணிக்கும் நிலையை மாற்ற சரியான நடவடிக்கை என்ன?

                - நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:           அதைத்தான் ‘வேலியே பயிரை மேயும் நிலை’ என்று கூறுவது!

கே:       வடமாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவனை உயர்ஜாதி மாணவர்கள் தாக்கியிருப்பது எதைக் காட்டுகிறது?

                - க.மணிமாறன், சேலம்-1

ப:           இன்னமும் உள்ள ஜாதி ஆணவத் திமிர் _ தாழ்த்தப்பட்டோர் உயருவதை உயர் ஜாதி, _ இடைப்பட்ட ஜாதியினர்க்கு சகிக்க மனம் வரவில்லையே! அங்கு பெரியார் பிறக்காததே மூலகாரணம்!

கே:       பெண்கள் முக அழகைப் பராமரிக்க பசு மூத்திரம் சிறந்தது என்று குஜராத் பசுப் பாதுகாப்பு வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது ஏற்புடையதா?

                - கு.இலட்சுமி, சென்னை-63.

ப:           முந்தைய “மொரார்ஜியின்’’ வைத்தியத்தை விட (Auto Urine Theropy) இது ஒருவகை புது சிகிச்சை முறைபோலும்!

                இதிலும்கூட எருமை மூத்திரம்  பாரபட்சமா? _ ஏனெனில் அது கருப்பு போலும்!

கே:       வரப்போகும் உ.பி. தேர்தல் களத்தில் ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். சதியை முறியடிக்க வலுவான அணி அமைக்க தாங்கள் முயற்சிப்பீர்களா?

                - இல.சங்கத்தமிழன், செங்கை

ப:           உ.பி.யில் இயல்பாகவே அது நடந்துவருகிறது; நாமும் அங்கே செல்ல வேண்டிய தேவை; ஏற்கனவே பெரியார் சென்று-விட்டார்! ஸீ

 

 

 

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit ஆசிரியர் பதில்கள் in FaceBook Submit ஆசிரியர் பதில்கள் in Google Bookmarks Submit ஆசிரியர் பதில்கள் in Twitter Submit ஆசிரியர் பதில்கள் in Twitter
  • < Prev
  • Next >

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.