Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2019 -> ஏப்ரல் 16-30 2019 -> ’சிலம்பொலி’ செல்லப்பனார் மறைந்தாரே!

’சிலம்பொலி’ செல்லப்பனார் மறைந்தாரே!

தமிழ் உணர்வும், இனவுணர்வும் கொண்ட, தமிழர் பெருமைப்படத்தக்க இலக்கிய பெரு மகனார் சிலம்பொலி செல்லப்பனார் (வயது 91) இன்று (6.4.2019) மறைந்த தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம். கல்வித் துறையில் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றி, அப்படிப் பணியாற்றிய காலங்களில் எல்லாம் தமது தனித் தன்மையான  முத்திரைகளைப் பொறித்தவர் சிலம்பொலி செல்லப்பனார் ஆவார்.

பெரியார் திடலுக்கும் அவருக்கும் உள்ள இடையறாத உறவு என்றென்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடியதாகும். பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் பல்வேறு தலைப்புகளில் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். சிறப்பாக அவர் பொழிந்த ‘இராவண காவியம்‘ பற்றிய சொற்பொழிவு இன்றும்கூட நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சியிலும் பங்கு கொள்வதில் பெருமைப்படக் கூடியவர்.  பலமுறை கழகத்தால் பாராட்டப்பட்டவர்! நாமக்கல்லில் நமது அறக்கட்டளைக்குச் சொந்தமான திருமண மண்டபத்தின் வாயிலில் சிலம்பொலி செல்லப்பனார் நினைவு பெரியார் படிப்பகம் இயங்கி வருகிறது.

நூல்களை எழுதிடுவோர் அவற்றிற்கான மதிப்புரைக்குத் தேடி செல்லும் ‘இலக்கியச் செம்மல்’ சிலம்பொலியார். அந்த மதிப்புரைகள் தனி நூலாகவே வெளிவந்துள்ளது. இந்நூலுக்காகவே தமிழ்நாடு அரசின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விருதும் அளிக்கப்பட்டது. சிலம்பொலியார் மறைவு - அவர் குடும்பத்தை மட்டும் சார்ந்த இழப்பல்ல; தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி

தலைவர், திராவிடர்கழகம்

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit ’சிலம்பொலி’ செல்லப்பனார் மறைந்தாரே! in FaceBook Submit ’சிலம்பொலி’ செல்லப்பனார் மறைந்தாரே! in Google Bookmarks Submit ’சிலம்பொலி’ செல்லப்பனார் மறைந்தாரே! in Twitter Submit ’சிலம்பொலி’ செல்லப்பனார் மறைந்தாரே! in Twitter

உண்மையில் தேட

wrapper

டிசம்பர் 01-15 2019

  • இயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்!
  • அப்படிப்போடு
  • அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (57) : கடவுள் பெயரைச் சொன்னால் உயிர் போகாதா?
  • ஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது!
  • உங்களுக்குத் தெரியுமா?
  • உணவே மருந்து
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (49) : இருபது கேள்விகளும் எமது பதில்களும்
  • கவிதை : வியப்புமிகு ஆசிரியர்
  • கவிதை : ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்து!
  • கவிதை : எம்தலைவ! நீங்களன்றி வழியே திங்கே?
  • கவிதை : வாயார - மன்மார - கையார வாழ்த்துவோம்!
  • சிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்.... : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்!
  • சிறப்புக் கட்டுரை : உலகப்பன்!
  • சிறப்புக் கட்டுரை : நோபல் அறிஞர்களின் வரிசையில் தமிழர் தலைவர்
  • சிறப்புக் கட்டுரை : பெரியார் பாதையில் துணிவுடன் பயணிக்கும் ஆசிரியர் அய்யா!
  • சிறுகதை : வேதங்கள் சொல்லாதது
  • சுவடுகள் : திருக்குறளில் கடவுள் வாழ்த்தா?
  • தகவல் களஞ்சியம்
  • தடைகளை நொறுக்கிச் சரித்திரம் படைத்த பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு
  • தலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்!
  • நுழைவாயில்
  • நேர்காணல் : ஆசிரியரை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்!
  • நேர்காணல் : ஆசிரியர் காலத்தில் திராவிடர் கழகம் உச்சத்தைத் தொட்டுள்ளது!
  • நேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்!
  • நேர்காணல் : ஆசிரியர்க்கு அதிகம் கோபம் வரும் ஆனால், அது எப்போதும் நன்மை தரும்!
  • பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்
  • பெரியார் பேசுகிறார் : முரண்பட்ட மூடநம்பிக்கைப் பண்டிகை “கார்த்திகைத் தீபம்”
  • மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [2]
  • முகப்புக் கட்டுரை : இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி!
  • வாசகர் கடிதம்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.