Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2019 -> டிசம்பர் 01-15 2019 -> கவிதை : எம்தலைவ! நீங்களன்றி வழியே திங்கே?

கவிதை : எம்தலைவ! நீங்களன்றி வழியே திங்கே?

தட்டிவிட்டுப் பறிக்கின்றார் கல்வி வேலை

தறிகெட்டு கிடக்கிறது சட்டம் நீதி

கட்டவிழா மொட்டுகள் கருகிச் சாக

காட்டாட்சி நடக்கிறது மதத்தின் பேரால்

எட்டப்ப ராகிவிட்டார் இம்மண் ஆள்வோர்

எதுநடந்தும் வாய்பேசா ஊமை யானார்

கொட்டட்டும் அய்யாவுன் முழக்கம் இங்கு

கொடுமைதனைப் பொசுக்குதற்கு இடியைப் போலே!

 

எட்டுத்திக்கும் பெரியாரை ஏற்றி வைப்போம்

இனமானம் காப்பதற்கும் சூளு ரைப்போம்

நட்டமென தந்துவுயிர் நாடு காக்க

நடைகட்ட உம்பின்னால் தமிழர் சேனை

வட்டமிடும் கழுகார்க்கு வளைந்தோ மில்லை

வாய்ப்பந்தல் போடுபவர் இங்கே இல்லை

“விட்டோமா பார்’’ என்றே வினைமு டிக்கும்

வீரமிகு பெரியார்படை யாரே வெல்வார்?

 

பத்தொன்று வயதினிலே மேடை ஏறி

இன்றுவரை வழங்குகின்றார் உழைப்பை வாரி

தொட்டாலே தீட்டென்ற சோகம் போக்க

தொடர்வாயே வரலாற்றின் துவக்கம் சொல்லி

கட்டாக ஆதாரங் காட்டிக் காட்டி

கனிவாக ‘அருள்கூர்ந்து’ கேட்கச் செய்து

பொட்டினிலே அடித்தாற்போல் தருவாய் பேச்சும்

போனதிசை தெரியாமல் மடமை போகும்!!

 

சிட்டாக நீயிருந்த போதில் சீறி

செருக்குற்ற பகையழிக்கப் போரும் செய்தாய்

பட்டாளம் இன்றுண்டு உன்றன் பின்னே

பார்த்தசைக்க விழியோரம் பாரும் சுற்றும்

கிட்டாது உரிமையிங்கு கானல் நீராய்

கேடர்களின் கொடுசெயலால் போன தய்யா!

“எட்டாதோ?” எனவேங்கும் எளியார்க் கெல்லாம்

எம்தலைவ! நீங்களன்றி வழியே திங்கே?

கவிஞர்.சுப.முருகானந்தம், மதுரை

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit கவிதை : எம்தலைவ!  நீங்களன்றி வழியே திங்கே? in FaceBook Submit கவிதை : எம்தலைவ!  நீங்களன்றி வழியே திங்கே? in Google Bookmarks Submit கவிதை : எம்தலைவ!  நீங்களன்றி வழியே திங்கே? in Twitter Submit கவிதை : எம்தலைவ!  நீங்களன்றி வழியே திங்கே? in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.