Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2019 -> டிசம்பர் 01-15 2019 -> வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

மதிப்புமிகு ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

வரவர “உண்மை’’ இதழ் தூங்கவிடாமல் சிந்திக்க வைக்கிறது. இது “உண்மை’’க்குக் கிடைத்த வெற்றிதான்! உண்மை வெல்லும். பொய், பித்தலாட்டங்கள், மூடநம்பிக்கைகள் முழுவதும் விலகும்  -  விலக வேண்டும். “உண்மை’’ இதழின் பங்கு இதில் அளப்பரியது.

திருவள்ளுவருக்கே சாயம் பூசிவிட்டார்களே? சாயம் வெளுத்துப் போகும். ஏனெனில், இவர்களது சிந்தனைகள் உலுத்துப் போன சிந்தனைகள்! மதம், கடவுள் என்று எப்படி, இப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள்! மக்கள் விழிப்படைய வேண்டும். திருக்குறளைப் படித்தால், உண்மை விளங்கும். ஜாதி, மதம், கடவுள் இவற்றுக்கு அப்பாற்பட்டது. பொது அறிவு நெறியைப் போதிக்கும் நூல் அது.

திருக்குறளில் ‘மானம்’ என்று ஓர் அதிகாரம் உண்டு. பெரியார் சொன்ன தன்மானத்தைத்தான் திருவள்ளுவரும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். (Self Respect) சுயமரியாதை, தன்மானம், அறிவு, அறிவுசார்ந்த சிந்தனை, ஒழுக்கம் இதைத்தானே வாழ்நாள் முழுவதும் பெரியார் வலியுறுத்தினார். அதைத்தான் “ஒழுக்கம் விழுப்பம் தருவதால், ஒழுக்கம் உயிரினும் பெரிதாக ஓம்பப்படும்’’ என்கிறார் வள்ளுவர். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பு ஒவ்வாது செய்தொழில் வேற்றுமையால்’’ என்கிறார் வள்ளுவர். இது எப்படிப்பட்ட உயர்நெறி, உலகிற்கே உகந்த நெறி! இதனால், சனாதனம் சுக்கு நூறாக நொறுங்கிப் போகிறதே! 

“அறிவியலுக்கு அடிப்படை இந்துமதமா?’’ என்னும் கட்டுரை, உண்மையில் என்னை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைத்தது என்பேன். நன்றி!

சந்திராயனை அனுப்பி விட்டு, இங்கே, இந்திரன், சந்திரன் கதைகள் உலா வருவது அபத்தத்தின் உச்சம் என்பேன். மொத்தத்தில் “உண்மை’’ உரக்கச் சொல்கிறது உண்மையை!

என்றென்றும் நன்றியுடன்,

- ஞா.சிவகாமி, போரூர், சென்னை - 116

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit வாசகர் கடிதம் in FaceBook Submit வாசகர் கடிதம் in Google Bookmarks Submit வாசகர் கடிதம் in Twitter Submit வாசகர் கடிதம் in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.